மத நிகழ்வுக்கு பொலிஸார் தடை!!
யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கு அம்மாவட்ட பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
மாநகர சபை மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவுபடுத்தும் நிகழ்வு எனவும், அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அம்முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது, “ மத நிகழ்வொன்று சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அதற்கான காணொளி ஆதாரம் உண்டு.
அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அம்மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடாகும். மேலும் இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வருகை தந்துள்ள மூவரே, இந்த நிகழ்வை நடத்துகின்றனர்” என முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டு மனுவை ஆராய்ந்த பொலிஸார், நிகழ்வு நடாத்துவதை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த மத நிகழ்வை எதிர்வரும் 29ஆம் திகதி கல்முனை பிரதேசத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மாநகர சபை மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மத நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த மத நிகழ்வானது ஏனைய மதங்களை இழிவுபடுத்தும் நிகழ்வு எனவும், அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அம்முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது, “ மத நிகழ்வொன்று சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. அதில் சிவன் மற்றும் புத்தர் ஆகியோரை சாத்தான்கள் என கூறப்பட்டது. அதற்கான காணொளி ஆதாரம் உண்டு.
அவ்வாறு ஏனைய மத கடவுள்களை சாத்தான்கள் என கூறுவது, அம்மதம் சார்ந்தவர்களை கோபமடைய செய்யும் செயற்பாடாகும். மேலும் இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வருகை தந்துள்ள மூவரே, இந்த நிகழ்வை நடத்துகின்றனர்” என முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டு மனுவை ஆராய்ந்த பொலிஸார், நிகழ்வு நடாத்துவதை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த மத நிகழ்வை எதிர்வரும் 29ஆம் திகதி கல்முனை பிரதேசத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை