ஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்!!

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஜப்பான் ஆலோசனை நடத்திவருகின்றது.


ஜப்பானில் அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்தும் வகையில் இவ்வாறு கடும் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்கு பெற்றோர் வழங்கும் உடல்ரீதியான தண்டனைகளை ஜப்பான் அனுமதிக்கின்றது. ஆனால், அண்மைய காலமாக பதிவாகிய இரு மோசமான சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களைத் தொடர்ந்து சட்ட நடைமுறையை அமுல்படுத்த திர்மானிக்கப்பட்டுள்ளது. உடல்ரீதியான தண்டனைகளை தடைசெய்யும் சட்டத்தை கொண்டுவருவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

உலகில் சுமார் 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் உடல்ரீதியான தண்டனைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒழுக்க விழுமியங்களை காரணம் காட்டி ஜப்பானில் இந்த நடைமுறையை நீக்கவில்லை. எனினும், அண்மைய காலமாக அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் கொலைகளைத் தொடர்ந்து சர்வதே நாடுகளின் விமர்சனத்தை ஜப்பான் சம்பாதித்துக்கொண்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு அதிகளவு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 20 சதவீதம் அதிகமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர் துஷபிரயோகங்களை தடுக்கவும், அது தொடர்பாக அறிவிக்கவும் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.