காஷ்மீரில் மீண்டும் தாக்குதலை நடத்த பா.ஜ.க திட்டம்-மெகபூபா முப்தி!!

காஷ்மீர்- பாலாகோட் தாக்குதல் சம்பவத்தைப் போன்று மீண்டுமொரு தாக்குதலை நடத்த பா.ஜ.க திட்டம் தீட்டுவதாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி  குற்றம் சுமத்தியுள்ளார்.


மெகபூபா முப்தி, தனது டுவிட்டர் பக்கத்திலேயே இதனை பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“தமது இராணுவ வீரர்களின் தியாகத்தையும், அவர்களது செற்பாட்டையும் கூறி, நடைபெறவுள்ள தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாமென்று பா.ஜ.க.வினர் எண்ணியிருந்தனர்.

ஆனால், இவை எதுவும் வெற்றிக்கு உதவி செய்யாதென தற்போது உணர்ந்துள்ள பா.ஜ.க.வினர் விரக்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் பாலாகோட்டில் நடத்தியதைபோல மீண்டுமொரு தாக்குதலை நடத்த பா.ஜ.க திட்டமிட்டு வருகின்றது” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.