ராஜஸ்தானை புயல் தாக்கும் அபாயம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெய்த கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களில் மத்தியபிரதேசத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அதனை தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறித்த புயல் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரத்தை துண்டிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.