தென்னிந்திய நதிகளை இணைப்போம்: பிரேமலதா !!

தென்னிந்திய நதிகளை இணைப்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து உத்தரமேரூர் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்படும்.
விவசாய விளைபொருள்களுக்கு நல்ல விலை நிர்ணயிக்கப்படும். விவசாயம் மேம்பட தென்னிந்திய நதிகள் நிச்சயம் இணைக்கப்படும். அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யவேண்டும். இந்த வெற்றிக் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றார் அவர். பிரசாரத்தின் போது, அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், தேமுதிக நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.