ஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு!!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.


2ஆவது கட்டமாக ஸ்ரீநகர், உத்தம்பூர் ஆகிய 2 தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் காஷ்மீர் மக்கள் வாக்குப்பதிவில் ஈடுவடுவதை விரும்பாத நிலையில் ஸ்ரீநகர் தொகுதியில் மிகக்குறைந்த வாக்குப்பதிவு இடம்பெற்றது.

காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் பாரமுல்லா, ஜம்மு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு கடந்த 11ஆம் திகதி வாக்குப்பதிவு நடந்தது.

இதனிடையே இந்தியா முழுவதும் நேற்று 95 தொகுதிகளுக்கு 2 ஆவது கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஸ்ரீநகரில் தான் மிகவும் குறைவான வாக்கு பதிவாகி இருந்தது. ஆனால் காஷ்மீரின் உத்தம்பூர் தொகுதியில் 70.2 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.

காஷ்மீரில் 2ஆவது கட்டத் தேர்தலில் மொத்தம் 45.7 (இரண்டு தொகுதியிலும் சேர்த்து) ஓட்டுப்பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மேற்கு வங்காள மாநிலம் ஐல்பைகுரி தொகுதியில்தான் அதிகபட்சமாக 82.26 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.