தேர்தலில் தமிழ் வேட்பாளர் களமிறங்குவது சிங்களப் பேரினவாதத்துக்கே வெற்றி!!
அரச தலைவர் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தி சிங்களத் தலைவர்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் செல்வதை தடுப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளால், சிங்கள பௌத்த பேரினவாதிகளின் சார்பில் நிறுத்தப்படும் ஒருவரே வெற்றிபெறுவார் என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள நவசம சமாஜக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சிங்களப் பேரினவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டு அதனூடாக வாக்குகளைப் பெற்று அரச தலைவராகலாம் என்ற கனவு தற்போது நிறைவேறாது என்ற நிலமை ஏற்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையுடைய ஒருவரை அரச தலைவர் தேர்தலில் நிறுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் மகிந்தவாதி உறுப்பினர்கள் உள்ளனர்.
அதனால் ‘நூதன துட்டகைமுனு’ ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். போரை முடித்தோம், நாட்டைப் பிரிக்கின்ற போராட்டத்தை அழித்தோம், அதனால் நாட்டைக் காப்பாற்றிய எங்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற அடிப்படையில் வாக்குகளை கேட்கும் திட்டத்தில் அவர்கள் இருக்கின்றார்கள்.
அதற்காக யார் போட்டியிடுவது? மறுபக்கம் அரச தலைவர் சிறிசேன மீண்டும் போட்டியிட எதிர்பார்க்கின்றார். கூட்டணிப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் சிங்கள வாக்குகளைப் பெறும் ஒருவரை நிறுத்துவது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை. ஆனால் சிங்கள பேரினவாதி ஒருவரை நிறுத்தினாலும் இன்று வெற்றிபெற முடியாத நிலை உருவாகியுள்ளது.
70 வீதம் சிங்கள மக்கள் உள்ளதோடு அதில் 5 வீதத்தினர் கிறிஸ்தவர்கள்.
65 வீதமே துட்ட கைமுனுவை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை தூண்டி ஏமாற்றக்கூடிய சிங்ளவர்கள் இருக்கின்றனர். சிங்கள மக்களை மாத்திரம் நம்பி நிறுத்தப்படும் வேட்பாளர், தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி வெற்றிபெற வேண்டுமானால் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். இது மிகவும் கடினமானதாக இருக்கும்.
கடந்தகால தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை இடைமறித்தே வெற்றிபெற்றார். இம்முறையும் மகிந்த, தமிழர் ஒருவரை அரச தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்து சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியை சுவீகரிக்க முயற்சிக்கின்றார்.
இன்றும் விடுதலைப் புலிகளின் பிரிவினை வாதக் கொள்கை கொண்ட சிலர், பிரிந்தே வாழ வேண்டும் என்ற சிந்தனையு டன் இருக்கின்றனர். அப்படியான ஒருவர்தான் எனது நண்பரான சிவாஜிலிங்கம். அவர் இதற்கு முன்னரும் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கு உதவியவர். தமிழ் மக்களின் வாக்குகளை திசை திருப்பி ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அதிகாரம் சென்றடையவதை தடுப்பதற்கு நினைக்கின்றார்.
அதற்காக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை தேர்தலில் நிறுத்தவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இதனூடாக பன்னாட்டுச் சமூகத்தின் உதவியைப் பெறமுடியும் என்றும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடிப்பதற்காக இந்தியாவும் – அமெரிக்காவுமே உதவியதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
தமிழ் மக்களின் நீதிக்காக அவர்கள் ஜெனிவாவில் குரல் கொடுத்தாலும் அமெரிக்காவும், இந்தியாவும் விடுதலைப் புலிகளை தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புப் பட்டியலில் சேர்த்து அழிக்க வேண்டும் என்று செயற்பட்டவர்கள். இன்றும் அவர்கள் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளனர். விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டின் ஊடாக தமிழ் மக்களின் போராட்டத்தில் குறைந்த பட்சம் பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியப்படாத ஒன்றாகும்.
அதற்கு எதிராக செயற்பட்டவர்கள்தான் இந்தியாவும் அமெரிக்காவுமாகும். ஆகவே அப்படியான வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வாக்குகளை சிதறடிக்கச் செய்து முற்போக்கு வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்க முடியும் என்று நினைத்தால் அதுவும் சாத்தியப்படாது போலியான முயற்சியாகவே அமையும் -– என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சிங்களப் பேரினவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டு அதனூடாக வாக்குகளைப் பெற்று அரச தலைவராகலாம் என்ற கனவு தற்போது நிறைவேறாது என்ற நிலமை ஏற்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையுடைய ஒருவரை அரச தலைவர் தேர்தலில் நிறுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் மகிந்தவாதி உறுப்பினர்கள் உள்ளனர்.
அதனால் ‘நூதன துட்டகைமுனு’ ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். போரை முடித்தோம், நாட்டைப் பிரிக்கின்ற போராட்டத்தை அழித்தோம், அதனால் நாட்டைக் காப்பாற்றிய எங்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற அடிப்படையில் வாக்குகளை கேட்கும் திட்டத்தில் அவர்கள் இருக்கின்றார்கள்.
அதற்காக யார் போட்டியிடுவது? மறுபக்கம் அரச தலைவர் சிறிசேன மீண்டும் போட்டியிட எதிர்பார்க்கின்றார். கூட்டணிப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் சிங்கள வாக்குகளைப் பெறும் ஒருவரை நிறுத்துவது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை. ஆனால் சிங்கள பேரினவாதி ஒருவரை நிறுத்தினாலும் இன்று வெற்றிபெற முடியாத நிலை உருவாகியுள்ளது.
70 வீதம் சிங்கள மக்கள் உள்ளதோடு அதில் 5 வீதத்தினர் கிறிஸ்தவர்கள்.
65 வீதமே துட்ட கைமுனுவை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை தூண்டி ஏமாற்றக்கூடிய சிங்ளவர்கள் இருக்கின்றனர். சிங்கள மக்களை மாத்திரம் நம்பி நிறுத்தப்படும் வேட்பாளர், தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி வெற்றிபெற வேண்டுமானால் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். இது மிகவும் கடினமானதாக இருக்கும்.
கடந்தகால தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை இடைமறித்தே வெற்றிபெற்றார். இம்முறையும் மகிந்த, தமிழர் ஒருவரை அரச தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்து சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியை சுவீகரிக்க முயற்சிக்கின்றார்.
இன்றும் விடுதலைப் புலிகளின் பிரிவினை வாதக் கொள்கை கொண்ட சிலர், பிரிந்தே வாழ வேண்டும் என்ற சிந்தனையு டன் இருக்கின்றனர். அப்படியான ஒருவர்தான் எனது நண்பரான சிவாஜிலிங்கம். அவர் இதற்கு முன்னரும் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கு உதவியவர். தமிழ் மக்களின் வாக்குகளை திசை திருப்பி ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அதிகாரம் சென்றடையவதை தடுப்பதற்கு நினைக்கின்றார்.
அதற்காக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை தேர்தலில் நிறுத்தவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இதனூடாக பன்னாட்டுச் சமூகத்தின் உதவியைப் பெறமுடியும் என்றும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடிப்பதற்காக இந்தியாவும் – அமெரிக்காவுமே உதவியதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
தமிழ் மக்களின் நீதிக்காக அவர்கள் ஜெனிவாவில் குரல் கொடுத்தாலும் அமெரிக்காவும், இந்தியாவும் விடுதலைப் புலிகளை தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புப் பட்டியலில் சேர்த்து அழிக்க வேண்டும் என்று செயற்பட்டவர்கள். இன்றும் அவர்கள் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளனர். விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டின் ஊடாக தமிழ் மக்களின் போராட்டத்தில் குறைந்த பட்சம் பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியப்படாத ஒன்றாகும்.
அதற்கு எதிராக செயற்பட்டவர்கள்தான் இந்தியாவும் அமெரிக்காவுமாகும். ஆகவே அப்படியான வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வாக்குகளை சிதறடிக்கச் செய்து முற்போக்கு வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்க முடியும் என்று நினைத்தால் அதுவும் சாத்தியப்படாது போலியான முயற்சியாகவே அமையும் -– என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை