தெல்லிப்பழை மருத்துவமனையில்- அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு!!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் பொது மருத்துவ நிபுணர் அம்பலவாணர் ரகுபதி ஞாபகார்த்தமாக சீரமைப்புச் செய்யப்பட்ட அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.
லண்டன் ‘அபயம்’ அமைப்பின் நிதியுதவியுடன் அது சீரமைக்கப்பட்டதோடுஒரு தொகுதி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மருத்துவமனை அத்தியட்சகர் மருத்துவர் யோ.திவாகர்தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ரகுபதியின் துணைவியார் வதனி மற்றும் பிள்ளைகள் இணைந்து அந்தப்பிரிவைத் திறந்து வைத்தனர். ‘அபயம்’ அமைப்பின் நிர்வாக உறுப்பினரும் ஆஸ்திரேலிய புற்று நோய் மருத்துவ நிபுணருமான மருத்துவர் திருமதி யசோதா சண்முகராஜா யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. தேவநேசனிடம் உபகரணங்களை வழங்கினார்.
வைத்தியர் ரகுபதி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் பணியாற்றியபோது, யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைக்கு நிகரான அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்று தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் உருவாக்கப்பட வேண்டும் என்று லண்டன் ‘அபயம்’ அமைப்பினரிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்ததன் பயனாக சுமார் 4 மில்லியன் ரூபா நிதியுதவியில் அவசர சிகிச்சைப் பிரிவு சீரமைப்புச் செய்யப்பட்டது.
நிகழ்வில் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி , மருத்துவர்களான எம். உமாசங்கர், முரளி வல்லிபுரநாதன் மற்றும் மருத்துவர்கள், தாதிய அலுவலர்கள், நிர்வாக அதி காரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
லண்டன் ‘அபயம்’ அமைப்பின் நிதியுதவியுடன் அது சீரமைக்கப்பட்டதோடுஒரு தொகுதி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மருத்துவமனை அத்தியட்சகர் மருத்துவர் யோ.திவாகர்தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ரகுபதியின் துணைவியார் வதனி மற்றும் பிள்ளைகள் இணைந்து அந்தப்பிரிவைத் திறந்து வைத்தனர். ‘அபயம்’ அமைப்பின் நிர்வாக உறுப்பினரும் ஆஸ்திரேலிய புற்று நோய் மருத்துவ நிபுணருமான மருத்துவர் திருமதி யசோதா சண்முகராஜா யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. தேவநேசனிடம் உபகரணங்களை வழங்கினார்.
வைத்தியர் ரகுபதி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் பணியாற்றியபோது, யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைக்கு நிகரான அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்று தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் உருவாக்கப்பட வேண்டும் என்று லண்டன் ‘அபயம்’ அமைப்பினரிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்ததன் பயனாக சுமார் 4 மில்லியன் ரூபா நிதியுதவியில் அவசர சிகிச்சைப் பிரிவு சீரமைப்புச் செய்யப்பட்டது.
நிகழ்வில் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி , மருத்துவர்களான எம். உமாசங்கர், முரளி வல்லிபுரநாதன் மற்றும் மருத்துவர்கள், தாதிய அலுவலர்கள், நிர்வாக அதி காரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை