தர்பார், அலெக்ஸ் பாண்டியனை விஞ்சும் அதிரடி!

ஏப்ரல் 9-ம் தேதி, 'தர்பார்'  போஸ்டர் அறிவிப்போடு  மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற ரஜினி, ஏப்ரல் 10-ம் தேதி  தொடங்கிய படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அதன்பின்னர்,  ஏப்ரல் 18-ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்னை வந்து, ஓட்டு போட்டுவிட்டு 19-ம் தேதி மீண்டும் மும்பைக்குச் சென்றார். அடுத்த 6 மாதங்களுக்கு, தொடர்ந்து மும்பையிலேயே 'தர்பார்' படப்பிடிப்பு நடக்கிறது.

ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்குகிறார், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். 'தர்பார்' படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி. ஏற்கெனவே, 'மூன்று முகம்' படத்தில் ரஜினி நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் பிரமாதமாகப் பேசப்பட்டது. இப்போது, அலெக்ஸ் பாண்டியன் வேடத்தையே மிஞ்சும் விதமாக 'தர்பார்' படத்தில் இடம்பெறும் போலீஸ் அதிகாரி கேரக்டர், பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார். வழக்கமாக, தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் நடிப்புக்காக தனிமையில் ஹோம் ஒர்க் செய்வது ரஜினியின் வழக்கம். அந்த வகையில், 'தர்பார்' படத்தில் ரஜினி காட்டப்போகும் மேனரிசங்கள் மிரளவைக்கப்போவது உண்மை என்று எதிர்பார்ப்பு பல்ஸை எகிறவைக்கிறார்கள் படக்குழுவினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.