யாழ். நல்லூரில் பொலிஸார் குவிப்பு!!

இலங்கையில் மத ஸ்தலங்களை இலக்கு வைத்து தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில், யாழ்.மரியன்னை தேவாயலம் ஆகிய பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தலைநகர் கொழும்பில் இதுவரை ஒன்பது பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. புறக்கோட்டை, ராஜகிரிய பகுதிகளில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த போதிலும், பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலையில் இருந்து இடம்பெற்று வரும் இத் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று மாலை முதல் நாளை காலை ஆறு மணி வரை அமுல்படுத்தமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 9 குண்டுத்தாக்குதல் காரணமாக இதுவரை 190 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.