தெஹிவளை குண்டு வெடிப்பு! சந்தேக நபர் கைது! பொது மக்கள் தாக்க முயன்றதால் பதற்றம்!!

தெஹிவளை குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தெடார்புடைய சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


தெஹிவளையில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கு இடமான முறையில் குறித்த பகுதியில் சஞ்சரித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்து ஜீப் வண்டிக்கு அருகாமையில் அழைத்துச் செல்லப்பட்ட போது பிரதேச மக்கள் சந்தேக நபரை தாக்க முயற்சித்த போது அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.

பொலிஸார் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு சந்தேக நபரை பொதுமக்களிடம் பாதுகாத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.