விசேட பாராளுமன்ற அமர்வு நாளை !!

கொழும்பு மற்றும் புற பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தொடர்  குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அச்ச சூழலில்  ஒரு மணித்தியால விசேட பாராளுமன்ற அமர்வு நாளை கூடுகின்றது.

நாளைய தினம் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் விசேட உரை நிகழ்த்தவுள்ளதுடன்  பயங்கரவாத தடுப்பும் சட்டமூலத்தையும் அரசாங்கம் சபையில் சமர்ப்பிக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து கடந்த இரண்டு தினங்களாக நாட்டில் அச்சச் சூழல் காணப்பட்டுவருகின்ற நிலையில் அவசர பாராளுமன்றத்தை கூட்ட அரசாங்கம் தீர்மானித்தது.

அதற்கமைய இன்று அவசரமாக கட்சி தலைவர் கூட்டம் கூட்டப்பட்டு அவரச பாராளுமன்றத்தை கூட்டுவது குறித்து ஆராயப்பட்டது. இதன்போது நாளைய தினமும் நாளைமறுதினமும் பாராளுமன்றத்தை கூட்ட பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.