சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவர் யாழில் கைது!

யாழ்.மத்திய பேருந்து நிலைய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


கொழும்பு – உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்போது யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பயண பொதியுடன் ஒருவர் நடமாடியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அங்கிருந்தவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார்கள். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை விசாரித்தபோது முரணான தகவல்களை வழங்கியுள்ளார்.

சந்தேகநபர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.