ஜோதிகா படத்தின் புதிய பதிவு!!

ஜோதிகா, ரேவதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களுக்குள் நிறைவடைந்துள்ளது. ஜோதிகா நடிப்பில் கடைசியாக வந்த காற்றின் மொழி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ராதா மோகன் இதனை இயக்கினார். அதன் பின் ரேவதியுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘புரொடக்‌ஷன் நம்பர் 11’ என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், தற்போது வந்துள்ள அதிகாரப்பூர்வ தகவலில், 35 நாள்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. படத்தை தயாரிக்கும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இந்த அப்டேட் வெளியானது. இப்படத்தை பிரபுதேவா கதாநாயகனாக நடித்த குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ஜோதிகா, ரேவதியுடன் இணைந்து யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசை விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு ஆர்.எஸ். ஆனந்த குமார்.
படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து சக்தி பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. இந்நிறுவனம்தான் ஸ்டூடியோ கிரீன் தயாரித்த சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை வெளியிடுகிறது. வரும் மே 17ஆம் தேதி மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் ஆகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.