இராணுவத்தினரை ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர் கைது!

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


வடமாகாண பிரபல பத்திரிகை ஒன்றுக்கு செய்தி வழங்கும் ஊடகவியலாளரான க.சரவணன் (வயது-24) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து இராணுவத்தினரை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வாறு கைதாகிய ஊடகவியலாளரிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.