சம்மாந்துறையில் ISIS தற்கொலை குண்டுதாரிகளின் தடையங்கள் மீட்பு!!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பிரதேசத்தின் சம்புமடுப் பகுதியில் இன்று மாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணும் மற்றும் பொலிஸாருக்குக் கிடைத்த முக்கிய தகவலொன்றின் பிரகாரம் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது எனப் பொலிஸாரும் இராணுவத்தினரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொலிஸாருக்கும் அங்கு மறைந்திருந்த குழு ஒன்றுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிறன்று 8 இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளிலும் கைது வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை