போதை ஊசி செலுத்தி தொல்லை!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு என்று அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.


வேளாங்கண்ணி - அற்புதராஜ் ஆகியோர் 16 வயது சிறுமியை வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டுக்கு வந்த சிறுமி, இனிமேல் தான் வேலைக்கு செல்லமாட்டேன் என்றும் அங்கு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

வேலைக்கு அழைத்து சென்ற இடத்தில் தனக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்தனர் என சிறுமி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பல திடுக்கிடும் தகவல்களை சிறுமி பொலிசில் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.