அளுத்கமை தர்கா நகரில் சிக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முக்கிய உறுப்பினர்!!

களுத்துறை - அளுத்கமை தர்கா நகரின் வெலிப்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் 24 வயதான நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தெஹிவளை குண்டு தாக்குதலில் தற்கொலை குண்டுதாரி கொல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கியஸ்தர் தற்கொலை குண்டுதாரியுடன் தொலைபேசியில் உரையாடியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் உபுல் நில்மினி ஆரியரத்ன இன்று அளுத்கமையில் வைத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை அளுத்கமை, தர்கா நகரில் இன்று அதிகாலை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முக்கிய உறுப்பினர் என கருதப்படும் 40 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.