நாட்டு மக்களுக்கு இந்தியா வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

அத்தியாவசிய தேவைகள் இன்றி இலங்கைக்கு செல்லவேண்டாம் என்று இந்தியா, தமது பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.


இந்தியாவின் வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு செல்லும் இந்தியர்கள், இந்திய உயர்ஸ்தானிகரத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திய பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பயணிக்குமாறும் அந்த அமைச்சு கோரியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 40பேர் வெளிநாட்டவர்கள்.

அதில், 11 பேர் இந்தியர்களாவர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கிடையில் இந்திக்கோ மற்றும் எயார் இந்தியா ஆகிய விமானங்கள், அனுமதிப்பத்திர ரத்துக்கான கட்டணங்களை அறவிடாமல் இருக்க தீர்மானித்துள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.