ஜனாதிபதி , பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கூட்டாக சந்தித்துள்ளனர்.


கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏற்படுத்தியுள்ள பீதியில், மக்கள் இன்னும் வெளியில் செல்ல முடியாமல் உள்ளனர். இந்நிலையில், ஆயர் இல்லத்திலிருந்து பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று காலை ஞாயிறு திருப்பலி ஆராதனையை நடத்தினர். தொலைக்காட்சி வழியாக இதனை தரிசித்த மக்கள் வீட்டிலிருந்தவாறு வழிபாடு நடத்தினர்.

இதில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சில அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அதன் பின்னரே அனைவரும் கூட்டாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

தாக்குதல் தொடர்பாக துப்புகள் வழங்கப்பட்டும் அதுகுறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு, தாக்குதலின் பின்னணியில் தௌஹீத் ஜமாத் அமைப்பு செயற்பட்டதென குற்றஞ்சாட்டப்படும் நிலையில், கடந்த அரசாங்கம் இந்த அமைப்புடன் தொடர்பை பேணி வந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான பின்னணியில் கடந்த அரசாங்கத்தை வழிநடத்தியவரும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களும் இணைந்து நடத்திய இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.