முறைப் பெண்ணை குத்திவிட்டு விஷம் அருந்திய இளைஞர்!

முறைப்பெண் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் ஒருவர் அவரைக் கத்தியால் குத்திவிட்டு, தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவருக்கும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி செவிலியராக பணி புரிந்து வருகிறார். வண்டலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தியின் உறவுமுறைப் பையன் முத்துவுக்கும் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் சில காரணங்களுக்காக திருமணப் பேச்சு தடைப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக காஞ்சிபுரத்திற்கு செவிலியர் பணிக்கு வரும் ஜெயந்தியை முறைப்பையன் முத்து சந்தித்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ஜெயந்தி அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து  வந்துள்ளார்.

இன்று மீண்டும் ஜெயந்தி பணி புரியும் தனியார் மருத்துவமனைக்கு வந்த முத்து ஜெயந்தியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். முத்து எவ்வளவு வற்புறுத்தியும் ஜெயந்தி திருமணம் செய்யாவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியை கழுத்துப்பகுதியில் குத்தி விட்டுத் தப்பியோடி மறைந்து கொண்டார். கத்தியால் குத்தப்பட்ட ஜெயந்தி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்ததைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீஸார் தப்பி ஓடிய முத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முத்து அந்த தனியார் மருத்துவமனையின் அறை ஒன்றில் மறைந்து கொண்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற முத்துவையும் காவல்துறையினர்  மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.