யாழில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்!!

இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை கண்டித்து யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டாமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மருதனார் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



இந்து சமயத்துக்கு எதிராக அண்மைக்காலமாக வன்முறைகள் திட்டமிட்ட வகையில் அரங்கேறியுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் பாரிய மதமாற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதோடு, இந்து ஆலய சிலைகள் விஷமிகளினால் திட்டமிட்டு உடைக்கப்படுவதாகவும் அவர்கள் சாடியுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் மதத்தை இழிவுபடுத்துவதுடன் மத வன்முறையை தூண்டுகின்றதென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் திட்டமிட்ட வகையில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்றும் அவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது ‘சைவர்களின் பரந்த மனப்பாங்கை பலவீனமாக கருதாதே’, ‘அந்நிய மதத்தினரின் மதமாற்றம் தமிழின அழிப்பின் இன்னொரு வடிவமா?’, ‘மத குருவின் மத வெறிக்கு நாடாளுமன்றத்தில் பரிந்துரையா’ போன்ற பதாதைகள் போராட்டக்களத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.