ஈரான் மற்றும் ஈராக்கிற்கு இடையிலான எரிவாயு சக்திவள வர்த்தகத்தில் இனக்கம்!!

ஈரான் மற்றும் ஈராக்கிற்கு இடையிலான எரிவாயு மற்றும் சக்திவள வர்த்தகத்தை விரிவாக்கவுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.


இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் இதற்காக 20 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு விஜயம் செய்துள்ள ஈராக் பிரதமரை இன்று (சனிக்கிழமை) ஈரான் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு, எண்ணெய் ஏற்றுமதியையும் மேற்கொள்ளவுள்ளதாக ரௌஹானி கூறியுள்ளார்.

தெஹ்ரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் கொள்வனவு செய்ய ஈராக்கிற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் ரயில் மார்க்கத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் ரௌஹானி இதன்போது குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.