செம்மணி ஏ9வீதியில் கிறிஸ்தவ பதாகை கிழித்தெறியப்பட்டது!


யாழ்ப்பாணம் ஏ9 வீதி, செம்மணிப்பகுதியில் நேற்று இரவு நடப்பட்ட பதாகை  கிழித்து எறியப்பட்டுள்ளது.
சைவ ஆலயத்திற்கு அருகில், கிறிஸ்தவ மத வாசகங்களை தாங்கிய பதாகையை மர்ம நபர்கள் நாட்டியிருந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், இன்று காலையில் அந்த பதாகையை சிலர் கிழித்து எறிந்தனர்.  மத முறுகலை ஏற்படுத்தவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.