வாக்குச்சாவடி அலுவலர் பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆசிரியை மாரடைப்பால் மரணம்!!

சேலத்தில் வாக்குச்சாவடி அலுவலர் பயிற்சி முகாமில் பங்கேற்ற அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள தேவனூர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் நித்யா (35). இவரது கணவர் வடிவேல்.

மக்களவைத் தேர்தலில் ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் ஆசிரியை நித்யாவும் கலந்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மயக்கம் வருவதாகக் கூறிய நித்யாவை சக ஆசிரியர்கள் அருகில் உள்ள காரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நித்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பயிற்சி முகாமில் ஆசிரியை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இச் சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.