பருத்தித்துறை அம்பன் கொட்டோடையில் படகு விசமிகளால் தீக்கிரை!!

பருத்தித்துறை  அம்பன்  கொட்டோடை பகுதியில்  மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில்  வலைகள் விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இன்று காலை 8:00 மணியளவில் அம்பன்  கொட்டோடை பகுதியில் கந்தன் சுரேந்திர ராசா என்பவர்  புதிதாக கரை வலையை கொள்வனது செய்து இன்று முதல் முதலாக தொழிலை மேற் கொண்டுவிட்டு படகு மற்றும் வலைகளை கடற்கரையில் வைத்து விட்டு வீடு சென்றுள்ள நிலையில் கடற்கரையில் எதோ  எரிந்து கொண்டிருப்பதை கண்ணுற்று கடற்கரைக்கு சென்றபோது சென்றபோது படகு மற்றும் வலைகள் எரிந்து கொண்டிருந்துள்ளன.

ஊரார்கள் சேர்ந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை என்றும்  இப் படகு மற்றும் வலைகளின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகம் என்றும்  இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும்   ஆனால் இதுவரை பருத்தித்துறை பொலீஸ் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவுமில்லை சம்பவ இடத்தை பார்வையிடவுமில்லை என  கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.