தேவாலயங்களில் ஆராதனைகள் நடாத்த வேண்டாம் என அறிவிப்பு!!

நாட்டில் உள்ள தேவஸ்தானங்களில், ஆராதனைகள் மற்றும் திருசொருப ஊர்வலங்களை தற்போதைய சூழ்நிலையில் நடாத்த வேண்டாம் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் உள்ள, இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடிய நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்..

இதேவேளை, நாட்டில் தற்போது ஏறபட்டுள்ள அசாதாரண சூழ்நிலை வழமைக்கு திரும்பும் வரையில் தேவஸ்தானங்களில், ஆராதனைகள் மற்றும் திருசொருப ஊர்வலங்களை நடத்தாது பாதுகாப்பு தரப்பினரின் வேண்டு கோள்களுக்கு அமைவாக செயற்படுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியபோது, இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் இஸ்லாமிய மதப்பிணக்குகள் காணப்படவில்லை என்பதோடு, இது பிறநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டமைந்துள்ளதாகவும் கொழும்பு மறைமாவட்ட பேராயர் விபரித்துள்ளார்.

எமது நாட்டை சீர்க்குழைய செய்யும் இதுபோன்ற சதிமுயற்சிகளை மக்கள்  மிகவும் நிதானமாக சிந்தித்து எதிர்கொள்ள வேண்டுமெனவும் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.