அரசியலமைப்பு சபை நாளை நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது!

புதிய பிரதம நீதியரசர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை நாளை நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது.

பிரதம நீதியரசர் நலின் பெரேரா எதிர்வரும் 28 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில், கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசேகரவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதன்படி, குறித்த பதவிகளில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு உரிய நபர்களை,அரசியலமைப்பு சபையில் பரிந்துரைக்கவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டம் ,அரசியலமைப்பு சபையின் தலைவர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.