டி.டி.வி.தினகரனுக்கு வந்த அதிரடி சோதனை!!

தமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்கு அமமுக சின்னத்திற்கு பரிசுப் பெட்டி சின்னம் கிடைக்குமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 


கைமீறி போன குக்கர் 


டி.டி.வி.தினகரனின் அமமுக பதிவு செய்யப்படாத நிலையில் அந்த கட்சிக்கு குக்கா் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க முடியாது என்று தோ்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. இதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதனால், மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் போட்டியிட அமமுகவுக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்கிற தினகரன் தரப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

கிடைத்தது பரிசுப் பெட்டி

அதன்படி, புதுச்சேரியின் ஒரு தொகுதி உட்பட தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் காலியாகவுள்ள 19 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 59 இடங்களில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

மீண்டும் குழப்பத்தில் டிடிவி 


இந்நிலையில் தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் அடிப்படையில், ஏற்கனவே தேர்தல் நடைபெறும் 40 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் மட்டுமே பரிசுப் பெட்டி சின்னத்தில் அமமுக போட்டியிட முடியும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூடுதலாக ஒரு தொகுதியில் வேண்டுமானால் அமமுக பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட முடியும்.  அது திருப்பரங்குன்றம் தொகுதியாக இருக்கலாம். மீதமுள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளில் அமமுக பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதில் குழப்பம் நீடிக்கிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.