பாரிஸ் பாலம் படைப்பகக் கலைஞர்கள் சீனத் தமிழனுக்கு மதிப்பளிப்பு!!

பிரான்ஸ் எப்பினே வித்தியா ஒன்றியத்தின் 20.04.19 விழாவில் பாரிஸ் பாலம் படைப்பகக் கலைஞர்கள் சீனத்தமிழன் திரு.வில்லியன் சியா
அவர்களால் பொன்னாடை போர்த்து நினைவுப் பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்கள்.


வித்தியா தமிழர் ஒன்றியம் எப்பினே 20.04.19 அன்று நடாத்திய சித்திரை தமிழ் புத்தாண்டு விழாவில் பல கலைநிகழ்வுடன் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் "அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம் "முழுநீள நகைச்சுவை நாடகமும் மேடையேறி சிரிப்பு சிந்தனையூட்டி கலாரசிகர்களை மகிழ்வித்திருந்தது.
நாடக நிறைவில் வித்தியா ஒன்றியத்தின் தலைவர் திரு.A.யோகராஜா அவர்களின்  ஏற்பாட்டில் மலேசியா வாழ் சீனத்தமிழன் திரு.வில்லியம் சியா அவர்கள் கலைஞர்கள்  மூத்த நாடகவியலாளர் J.A,சேகரன், ஈழத்தமிழ்விழி புனிதமலர் T,பரமேஸ்வரன், அகிலா, சிரிப்பு சித்தன் சிறிஅங்கிள், கே.பி.லோகதாஸ் ஆகியோரை பொன்னாடை போர்த்தியும் நினைவுப்பரிசுகள் வழங்கி மரியாதை செய்தார்.

ஒளிப்படங்கள் நன்றி அலெக்ஸான்டர்(K.P.L)


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.