யேர்மனி டோட்மூண்ட் நகரில் Tamil swag (தமிழ்சுவைக்) நிகழ்வு !!

20.04.2019 (சனிக்கிழமை) தமிழர் பொது நிகழ்வுகளில் நேரம் என்பது அழைப்பிதழ் குறிப்பிப்பிட்ட நேரம் ஆரம்பிப்பது மிக குறைவே. ஆனாலும் இவ் நிகழ்வில் ஆரம்பிக்கும் நேரமும் நிறைவுறும் நேரமும் குறிப்பிடப்பட்டதை போன்றே நிறைவாக நடைபெற்றமை பாராட்ட வேண்டிய நிகழ்வே. நிகழ்வின் ஏற்ப்பாட்டாளர் திரு. வசந் அவர்களை பாராட்டுகின்றேன். நிகழ்விற்கு மக்களின் வருகை குறைவாக காணப்பட்டாலும் நிகழ்வுகள் சற்று வித்தியாசமானதாக அமைந்திருந்தது. தமிழ் சுவைக் என நடாத்திய நிகழ்வில் பாரதியாரின் மிடுக்கான படமும் வரையப்பட்டிருந்தமை சிறப்பு.


                                       நிகழ்விற்கு  எந்த நபரும்    விருந்தினராக   அழைக்கப்படவில்லை.  மங்கல விளக்கேற்றல்  இல்லை. எந்தவிதமான பேச்சு  நிகழ்வுகளும்  இல்லை. நிகழ்வின் நேரம் 3 மணித்தியாலங்களே. நிகழ்வில் நடனம், பாடல், கடும்குரல் பாடல்,  ஆடல் மட்டுமே அமையப்பெற்றது. ஆனாலும் அத்தனை நிகழ்வுகளும் அருமையே. நிகழ்வில் நடனமாடிய சுருதியின் நடனம் மிக அருமை. அனைத்து முகபாவனையும் நடனத்தில் காட்டியமை சிறப்பே. இருப்பினும் நிகழ்விற்கு ஊடகம் சார்ந்த சில நபர்கள் ,எழுத்தாளர்கள் , எமது நகரத்தில் வாழக்கூடிய பலர் வருகை தரவில்லை. காரணம் அதிதிகளாக அழைத்திருப்பின் வருகை தந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனாலும் நிகழ்வை நேரம் கணித்து ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்திற்கு நிறைவு செய்த விழாகுழு பாராட்ட வேண்டியவர்களே.

  நிகழ்வினை சிறப்பாக தொகுத்து வழங்கிய திரு.தர்மா மற்றும் திருமதி.சகானா ஆகியோர் நகைச்சுவையுடன் தொகுந்து வழங்கியமை சிறப்பே.

.
கி.த.தர்மாமகன்.
.யேர்மனி.











கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.