நாட்டின் கல்விமான்களை வைத்தே சவால்களை வெற்றிகொள்வேன்!!

நாட்டின் சமூக, பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் கல்விமான்களின் பங்களிப்பே முக்கியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற INNOVATE SRILANKA 2019 கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமூக, பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசியல்வாதிகளின் பணிகளை பார்க்கிலும் நாட்டின் கல்விமான்களின் தலையீடு மிகவும் முக்கியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சவால்களை வெற்றிகொள்வதற்கு கல்விமான்களின் அணியொன்று நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விஞ்ஞான, தொழில்நுட்ப புத்தாக்கத் துறையில் சர்வதேச தூதுவராக கடமை புரியும் வித்யாஜோதி கலாநிதி பந்துல விஜே உள்ளிட்ட நிபுணர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.