மின்சார வெட்டிற்கு விளக்கம் சொல்ல நீதிமன்றத்திற்கு அழைப்பு!!

முன்னறிவித்தல் இல்லாமல் மின்வெட்டை நடைமுறைப்படுத்தியமை உள்ளிட்ட விவகாரங்களில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கில், எதிர்வரும் 9ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் கடந்த 29ம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியும், மின்சாரசபை அதை வழங்கவில்லை. எந்தவித முன்னறிவித்தலும் இல்லாமல் மின்வெட்டை அமுல்படுத்துவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள் என பொதுப்பயன்பா டுகள் ஆணைக்குழு சார்பில் மன்றில் குறிப்பிடப்பட்டது.

வழக்கை ஆராய்ந்த கோட்டை நீதிவான், எதிர்வரும் 9ம் திகதி மன்றில் முன்னிலையாகி, விளக்கமளிக்குமாறு இலங்கை மின்சாரசபைக்கு உத்தரவிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.