”நயன்தாரா பற்றி ‘உண்மையை’ பேசியதால்தான் கைதட்டி ரசிகர்கள்”!!

’கொலையுதிர் காலம்’ பட விழாவில் தான் தவறாக எதையும் பேசவில்லை என்றும் அவ்வாறு பேசியிருந்தால் அதை அத்தனை பேர் கைதட்டி ரசித்திருக்கமாட்டார்கள் என்றும் அதிரடியாகப் பேசி புது வம்பு ஒன்றுக்கு வழி வகுத்திருக்கிறார் நடிகர் ராதாரவி.


நயன் தாரா தொடர்பான சர்ச்சைகளுக்குப் பிறகு தி.மு.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சில தினங்கள் மட்டுமே அமைதி காத்த ராதாரவி நேற்று 'எனக்கு இன்னொரு முகம் இருக்கு'குறும்படம் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார்.ராதாரவி
அவ்விழாவில் பேசிய அவர்,”சிங்கம் எப்போதுமே கர்ஜிக்கும். இயக்குநர் பேரரசு பேசுவதை ரசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால், இடையே பயந்துவிடாதீர்கள் என்றார். பயம் என்பது தான் எங்களுடைய குடும்பத்திலேயே கிடையாது. எதற்கு பயப்பட வேண்டும்?. சிலர் நடிப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி நிறுத்த முடியும்.
நான் சந்தித்தது ஒரு பிரச்சினையே இல்லை.இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதே கிடையாது. ஏனென்றால் இதெல்லாம் தற்காலிக பிரச்சினை. இவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு இது என்ன ஐ.நா சபை பிரச்சினையா?. நம்ம பேசினதில் உண்மை இருக்கா இல்லையா. அவ்வளவு தான். உண்மை என்றவன் ஏத்துக்குட்டு போ, இல்லை என்கிறவன் விட்டுவிடு.நயன்தாரா
சந்தையில் பாகற்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் விற்பார்கள். பாகற்காய் கசக்கும் ஆனால் உடம்புக்கு நல்லது. அதை விற்காதே என்று சொல்வதற்கு உரிமை கிடையாது. நீ வாங்காமல் போ அவ்வளவு தான். நான் நிறையப் பேசுவதற்கு காரணம், நிறைய படிப்பேன்.
நான் பேசும் போது இவ்வளவு பேர் கைதட்டி ஆதரிக்கிறீர்கள். கோபமாக இருந்தால் யாராவது பேசியிருக்கலாம் அல்லவா?. இது தான் அன்றைக்கு 'கொலையுதிர் காலம்' சந்திப்பிலும் நடந்தது. அதை தவறு என்று சொல்கிறார்கள். எப்போதுமே உண்மையைச் சொன்னால் ஆதரிப்பார்கள்.
'கொலையுதிர் காலம்' பிரச்சினையின் போதே, யாராவது மனவருத்தப்பட்டிருந்தால், அவர்களிடம் மனவருத்தப்படுகிறேன் என்று சொல்லுங்கள் எனச் சொன்னேன். மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது. எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், கொலை குற்றமா பண்ணிவிட்டேன்” என்று பேசினார் ராதாரவி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.