தாக்குதல்களை தொடா்ந்து பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளா் நியமனம்!!

இலங்கையில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடா்ந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் மற்றும் பொலிஸ்மா அதிபா் ஆகியோா் பதவி நீக்கப்படவேண்டும். என அழுத்தங்கள் எழுந்த நிலையில் இன்று மாலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் பதவி நீக்கப்பட்டு புதிய செயலாளா் நியமிக்கப்பட்டாா்.


பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளாா். 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரை இராணுவத் தளபதியாக அவர் கடமையாற்றினார்.

இராணுவத்தின் 20வது தளபதியாக ஜெனரல் தயா ரத்நாயக்க பதவி வகித்தார்.  2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததும் சேவை நீடிப்பு வழங்கப்படாமல் ஏமாற்றத்துடன் இராணுவ சேவையிலிருந்து ஜெனரல் தயா ரத்னாயக்க ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் அவரை பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இதேவேளை புதிய பொலிஸ்மா அதிபா் தொடா்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.