எச்சரிக்கையாக பயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் என இலங்கைக்கு கடிதம்!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த விடயம் தொடர்பாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை தாக்குதல்கள், கிறிஸ்தவ கத்தோலிக்க மற்றும் வெளிநாட்டவர்களை இலக்கு வைக்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அந்த கடிதத்தில் விமானப் படை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள், அரச மற்றும் தனியார் சொத்துக்களை இலக்கு வைத்து இந்த தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.