யாழ்.தீவகத்தில் இஸ்லாமிய தீவிரவாத இறுவெட்டுக்கள்,அரபு நுால்களுடன் 5 போ் கைது!

யாழ்.தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இஸ்லாம் மதம் சாா்பான இறுவெட்டுக்கள், அரபு நுால்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தீவகம் நயினாதீவு பகுதியில் கடற்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை நடாத்தியிருக்கின்றனா்.

இதன்போது நயினாதீவில் அல்குவைதா தீவிரவாத அமைப்பு சாா்ந்த இறுவெட்டுக்கள், அரபு நுால்களுடன் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும் வேலணை பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன்,

கைது செய்யப்பட்ட 5 பேரும் ஊா்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.