தமிழ் மக்கள் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட வட்டுவாகலில் நீதி ஏக்க கண்காட்சி!!

தற்போது விடுதலைப் போராட்டம் மௌனித்துப் போன முள்ளிவாய்க்கால் தாண்டி அடிமைகளாக சிங்கள தேசத்திடம் நாம் வந்து சேர்ந்த வட்டுவாகல் பாலத்தடியில் ஆரம்பித்துள்ள இளம் ஊடகவியலாளன் அன்புச் சகோதரன் குமணனின் புகைப்படக் கண்காட்சிக்கு வலுச் சேர்ப்போம் உறவுகளே .!
..நீதி - ஏக்கம் - கண்ணீர் உத்தரிப்புக்களின் அல்பம் கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது. இவ் ஒளிப்படக் கண்காட்சியின் காண்பியல் 2 வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை இடம்பெற்றது.


கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு, கிழக்கெங்கிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றமை யாவரும் அறிந்ததே. அவர்களின் துயரத்தை ஒளிப்படங்கள் மூலம் ஆவணமாக்கிய ஊடகவியலாளர் கே.குமணன் முறைப்படுத்தப்பட்ட கண்காட்சியாக நடத்தினார்.









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.