தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


அதன்படி அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் அ.ஜுட்சன் உத்தரவிட்டுள்ளார்.

கடற்தொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் குறித்த மீனவர்களை ஊர்க்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஜுட்சன் வீட்டில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முருகேசன், முனியாண்டி, ரெனிசன், சுப்பையா உள்ளிட்ட நான்கு மீனவர்களை நெடூந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மருத்துவ சோதனைக்கு பின்னர் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.