இந்தியப் பேராயத்தின் நிறுவன நாள் நிகழ்வுகள்!!

கலாசார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் நிறுவன நாள் நிகழ்வுகள் யாழில் கொண்டாடப்பட்டன.


இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் புகையிரத வீதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாததினால் கலாசார உறவுகளுக்கான இந்திய பேராயம் 1950ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  9ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

அந்த நிகழ்வினை கொண்டாடும் முகமாக இந்திய துணைத்தூதரகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட வட.மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட.மாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், போராசியர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஐ,சி.சி. ஆர் புலமைப்பரிசில் தொடர்பான விழிப்புணர்வு குறித்த பட்டிமன்றமும் தேசிய கல்வியற் கல்லூரி தமிழ்துறை விரிவுரையாளர் லலீசன் குழுவினரின் பட்டிமன்றமும் இடம்பெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.