நுவரெலியா காலி வீதியில் விபத்து!!

நுவரெலியாவிலிருந்து காலி பகுதியை நோக்கி புறப்பட்டுச் சென்ற  முச்சக்கரவண்டி திடீரென குடை சாய்ந்ததில் அதில் பயணித்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருமே படுகாயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியா – ஹற்றன்  பிரதான வீதியிலுள்ள கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில், குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.