ஈராக்கில் பெண் தீவிரவாதிக்கு சிறைத்தண்டனை!

பிரான்ஸின் பெண் தீவிரவாதி ஒருவருக்கு ஈராக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Jamila Boutoutaou என்ற பெண் தீவிரவாதிக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு குறித்த பெண்ணின் கணவன் மற்றும் மூத்த மகன் ஆகியோர் தாக்குதலில் உயிரிழந்திருந்ததுடன், இவர் பக்தாத் நகரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Jamila Boutoutaou என்ற பெண் தீவிரவாதியின் கணவரும் ஐ.எஸ் தீவிரவாதி என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக Jamila, பிரான்சில் தனது தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்றின் நகல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘நான் ஒரு சூழ்நிலைக் கைதி. நான் எனது கணவரைத் திருமணம் செய்யும்போது அவர் ஒரு சொல்லிசைப் பாடகராக மாத்திரமே இருந்தார்.

அதன் பின்னர் நாம் துருக்கி வந்தோம். அதன் பின்னர்தான் எனக்கு அவர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. நான் ஒரு நிரபராதி’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.