மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்!!

யாழ். மீசாலை பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு முதியவர்கள் காயமடைந்துள்ளனர்.


இவர்கள் இருவரும் கை மற்றும் முதுகு பகுதிகளில் எரிகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு முதியவர்களும் நேற்று (புதன்கிழமை) மரத்தின்கீழ் அமர்ந்து உரையாடியபோதே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர்.

மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியைச் சேர்ந்த அம்பலவானார் சிவசுப்பிரமணியம் (வயது-65) மற்றும் அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது-65) ஆகிய இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை யாழில் கடந்த செவ்வாய்க்கிழமை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.