குண்டு வெடிப்பு தொடர்பாக நேரில் கண்டவர் சாட்சி!!

கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் இன்று காலை ஒரே சமயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 105 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குண்டு வெடிப்பில் 440க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவத்தை நேரில் கண்டவர் ஊடகமொன்றுக்கு சாட்சியமளிக்கையில்,

டிப்பரில் கல் கொண்டு போகும்போது டயர் வெடித்ததைப் போன்று கேட்டது. நான் வெளியில் வந்து பார்த்தேன் புகை மண்டலமாக காணப்பட்டது. அப்போது எல்லோரும் உள்ளே சென்று உயிருடன் உள்ளவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பினோம். சிறிய குழந்தைகள் சூன்று நான்கு பேர் இருந்தார்கள். மற்றவர்களை மூடி வைத்தோம்.

ஒன்றும் சொல்ல முடியாது எல்லாம் துண்டுதுண்டாக காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.