மதகுருவின் கருத்தால் சிக்கலுக்குள்ளான கிளிநொச்சி தேவாலயம்!!

நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் அரசியல் இலாபம் கருதி நடத்தப்பட்ட மத நல்லிணக்க கூட்டத்தில் குண்டு தாக்குதலில் தேடப்படும் பெண்ணை தான் கிளிநொச்சி தேவாலயத்தில் கண்டதாக கூறிய  கிளிநொச்சி திரேசம்மாள் தேவாலயத்தின் பங்குத்தந்தயின்   கருத்தால் இன்று தேவாலயம் இராணுவ பொலிஸ் மயப்படுத்தப்பட்டுள்ளது.


வழிபட வருகின்றவர்கள் சோதனை கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.  இதுபற்றி எமது செய்திகளில் நேற்றைய தினம் கிறித்துவ மதகுருவின் கருத்தின் மூலம் கிளிநொச்சி படை மயப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தோம்.  மேற்படி கிறித்துவ மதகுரு குண்டுத்தாக்குதலோடு தொடர்புபட்ட பெண்ணை தான் தனது ஆலயத்தில் கண்டதாக கூறப்பட்ட கருத்துத் தொடர்பாக விசாரணக்கு உபடுத்தப்பட்டு உண்மை கண்டறியப்படவேண்டும்.
இதுபோன்ற கிறிஸ்தவ மதகருமாரின் பொறுப்புணர்வற்ற செயற்பாடு வடக்கு கிழக்கில் இராணுவ மயத்தை வலுப்படுத்துவதுடன் மதவாத்தையும் ஊக்குவிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.