தேவாலயத்திற்கு சென்றவர்களை தேடும் உறவுகள்!!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருவாரம் கடந்துள்ள நிலையில், தேவாலயத்திற்கு சென்ற பலரையும் அவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் தேடிவருகின்றனர்.


கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவவர்களும் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து தொடர்ந்தம் இலங்கை மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்களே தினமும் அரங்கேறியவண்ணமுள்ளன.

இந்தநிலையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்ற தமது தாயாரை ஒரு வாரமாக அவரின் இரண்டு மகன்களும், அவரின் உறவினர்களும் தேடி வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.