உயர்நீதிமன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு-சுன்னாகம் நிலத்தடிநீர் மாசு விவகாரம்!!
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை 20 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வலிகாமத்தை அண்டிய பகுதிகளின் நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், அந்த பிரதேசவாசிகள் 500 பேருக்கு இழப்பீடாக இந்த பணத்தை வழங்க இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் சார்பில் பேராசிரியர் ரவீந்திர காரியவசத்தால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு சில வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் நீடித்திருந்த நிலையில் இன்று முடிவு எட்டப்பட்டுள்ளது.
நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டால், வலிகாமம் பகுதி கிணறுகளில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலப்பதால், குடிநீர் மாசடைவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், நொதேர்ன் பவர் நிறுவன மின் உற்பத்திக்கு தடைவிதித்ததுடன், வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்த பிரதேசவாசிகள் 500 பேருக்கு 20 மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வலிகாமத்தை அண்டிய பகுதிகளின் நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், அந்த பிரதேசவாசிகள் 500 பேருக்கு இழப்பீடாக இந்த பணத்தை வழங்க இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் சார்பில் பேராசிரியர் ரவீந்திர காரியவசத்தால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு சில வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் நீடித்திருந்த நிலையில் இன்று முடிவு எட்டப்பட்டுள்ளது.
நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டால், வலிகாமம் பகுதி கிணறுகளில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலப்பதால், குடிநீர் மாசடைவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், நொதேர்ன் பவர் நிறுவன மின் உற்பத்திக்கு தடைவிதித்ததுடன், வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்த பிரதேசவாசிகள் 500 பேருக்கு 20 மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை