ஆணைக்குழு, ஔடத கட்டுப்பாட்டுச் சபை தலைவர்களுக்கு அழைப்பு!!

நல்லாட்சி அரசாங்கத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தற்போதைய தலைவருக்கும், முன்னாள் தலைவருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


குறைந்த தரத்திலான ஊசி மருந்துகளை மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடு, குறித்த ஆணைக்குழுவில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒளடதங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் உபாலி அபேரத்ன இதன்போது தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின்போது, வேறு ஒளடதங்கள் குறித்து கேள்விக்குட்படுத்துவது, இந்த விசாரணைகளை திசைத்திரும்பும் என்றும் எனவே, அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.