உல்லாசம் என்ற பெயரில் சீனாவில் இருந்து இலங்கைக்கு பெண்கள் இறக்குமதி?

இணையதளம் ஊடாக கொழும்பில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் பம்பலபிட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.வெளிநாட்டுப் பெண்களை இலங்கைக்கு அழைத்து வந்து, இணையதளம் ஊடாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், கசகஸ்தான் மற்றும் சீன நாட்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இலங்கைக்கு உல்லாச பிரயாணிகள் மற்றும் வியாபாரம், தொழில் நிமிர்த்தம் கருதி சீனாவில் இருந்து விலைமாதுகள் இலங்கைக்கு அழைத்துவந்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுத்துவதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில், குறித்த இணையதளம் டுபாயில் உள்ள நபர் ஒருவரினால் இயக்கப்பட்டு வந்ததாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இலங்கையில் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக வதந்திகளும் வருகின்றமை குறித்து ஆராயப்படவேண்டும் என அறிவுருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், குடிவரவு, குடியகல்வு, திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.