மன்சூர் அலிகான் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் திடீரென மயக்கம் அடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில்,  திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான வினய்யிடம் தனது வேட்பு மனுவை கடந்த மாதம் 22-ம தேதி தாக்கல் செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் எம்.பி ஆனா சேரில் உட்கார்ந்து சீட்டு தொடச்சிட்டு வர மாட்டேன். எழுந்து நின்று கேள்வி கேட்பேன் என்றார்.
இதையடுத்து, மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் பொது மக்களை அணுகி அவர் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். டீ கடையில் டீ போடுவது, இளநீர் கடையில் இளநீர் வெட்டி விற்பது, குப்பை அள்ளுவது, ஹோட்டல்களில் புரோட்டா போடுவது, பொதுமக்களின் சுமைகளை சுமந்து செல்வது, சட்னி அரைத்து கொடுப்பது, ஷூக்களுக்கு பாலிஷ் போடுவது என நூதனமான முறையில் பிரசாரம் செய்து வந்தார்.
இதனால் பொதுமக்களிடம் அதிக கவனத்தை பெற்றிருந்த மன்சூர் அலிகான், நிலக்கோட்டைத் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அழகம்பட்டியில் பிரச்சாரம் செய்த போது மன்சூர் அலிகானுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.